தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். தமிழில் வசூல் மன்னனாக விளங்கும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுவதும் முக்கியமாகும்.இந்த நிலையில் இவர் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தை தெருங்கு இயக்குநரான வம்சி இயக்குவதோடு இவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயகத்தில் நடிக்கவுள்ளார்.இது குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மேலும் தளபதியின் தந்தை ஒரு இயக்குநர் என்பதும் தாய் நடிகை என்பது யாவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இவரது தாயாரான ஷோபா சந்திரசேகர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர் தனது முதல் டுவிட்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எனது அன்பு மகன் புகைப்படத்தை பதிவு செய்வதில் மகிழ்ச்சி என்றும் டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார் .இதனை அடுத்து ஷோபா சந்திரசேகர் அவர்களின் டுவிட்டர் பக்கத்திற்கு ஏராளமானவ ஃபாலோயர்கள் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!