விஜய் எந்தளவிற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றாரோ அதே அளவிற்கு தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடிகர் விஜய் தலைமையில் தான் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமட்டுமல்லாது சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இவர் மேற்கொண்டு வருகின்ற சந்திப்புக்களும் அரசியல் குறித்த எண்ணமாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சமீபத்தில் சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் நடைபெற்றது. அதில் மகளிரணி நிர்வாகி நான் பெரிய விஜய் பான் எனப் பேசியபோது மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் "விஜய் எனப் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம், தலைவனை தளபதி என மட்டுமே அழைக்க வேண்டும்" என அட்வைஸ் பண்ணி உள்ளார்.
Listen News!