• Sep 20 2024

விஜய் சாட்சியாக நடந்த இரண்டாவது திருமணம்: இது புதுக்கதையாக உள்ளதே-பகீர் கிளப்பிய எஸ்.ஏ.சி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஷோபாவுக்கும், தனக்கும் இந்து, கிறிஸ்துவ முறைப்படி இரண்டு முறை திருமணம் நடந்தது பற்றி கூறியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் மிக முக்கியமானவர் எஸ்ஏ சந்திரசேகர். முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர்தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைத்து கொடுத்தவர். மேலும் இவர் தற்போது ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூ டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.

மேலும் இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனது திருமணம் மகன் விஜய் சாட்சியாக வைத்து நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் எஸ்.ஏ.சி. கூறும் போது, நானும் ஷோபாவும் திருமணம் பண்ணிக்கிட்டோம். நடிகர் திலகம் சிவாஜினியின் துணைவியார் தாலி எடுத்து கொடுத்தார்.

அடுத்த ஒரு வருடத்தில் விஜய் பிறந்தார். நான் கிறித்துவன். ஷோபா இந்து. திருமணத்திற்கு பின்னர் கோவிலுக்கு சென்றாலும், சர்ச்சைக்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். திருப்பதி சென்று நான் மொட்டை அடித்திருக்கிறேன். அப்போது ஒருநாள் ஷோபா என்னிடம் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னாள்.

அதற்கு ஏன் என்று கேட்டபோது, இருவரும் வெவ்வேறு போட்டில் ஒன்றாக பயணிக்கிறோம். எனினும் திடீரென்று ஏதாவது சுழல் வந்தால் இருவரும் ஒன்றாக கரை சேர முடியாது என்று சொன்னாள். அதில் ஆயிரம் அர்த்தம் இருந்ததது. அவள் ஆசைப்படி கிறித்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அப்போது 6 வயது பையனாக விஜய் சாட்சியாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த வீடியோவில் தனக்கு சினிமாவில் கிடைத்த முதல் வாய்ப்பு. விஜயகாந்த் ஹீரோவாக தேர்வானது. ‘சட்டம் ஒரு இருட்டறை’ டைட்டில் வைக்கப்பட்டது உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement