கோலிவுட்டின் Top ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோவில் நடித்து வருகிறார். . ஆக்ஷன் ஜானரில் உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். முதன்முறையாக இணைந்துள்ள விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தளபதி 68 படம் குறித்து இதற்குமேல் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், விஜய் ஜோடியாக ஜோதிகா, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லியோ ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தளபதி 68ல் விஜய் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இதற்காக விஜய் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும் தளபதி 68 படத்தையும் வேகமாக முடிக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய விஜய், லியோ ஷூட்டிங் முடிந்ததும் 2 மாதங்கள் ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளாராம்
அதனால் தளபதி 68 படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்கலாம் என வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளாராம். தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் விஜய் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதேநேரம் தளபதி 68 ஸ்கிரிப்ட்டை வெங்கட் பிரபு இன்னும் முடிக்கவில்லை எனவும், அதுதான் உண்மையான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!