• Sep 20 2024

திடீரென தமது பெயரை மாற்றிய விக்ரம் மற்றும் த்ரிஷா- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக சமூக வலைதளத்தில் ஆதித்ய கரிகாலன், குந்தவை என தற்காலிகமாக தங்களது பெயர்களை த்ரிஷா மற்றும் விக்ரம் ஆகியோர் மாற்றியுள்ளனர்.

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தை பிரமாண்ட இயக்குநராக மணிரத்னம் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ளார்.


இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் மற்றும் த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக சமூக வலைதளத்தில் ஆதித்ய கரிகாலன், குந்தவை என தற்காலிகமாக தங்களது பெயர்களை மாற்றியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இதைத்தொடர்ந்து, மற்ற நடிகர்களும் தங்களது இணைய பக்கத்தில் பெயர்களை மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement