• Sep 20 2024

விபத்திலிருந்து மீண்ட விக்ரம்; வித்தியாசமான லுக்கை பார்த்து வியக்கும் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வனை தொடர்ந்து தங்கலான் படத்தில் நடித்து வந்தார் சீயான் விக்ரம்.பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் பகுதிகளில் நடைபெற்றது.

தங்கலான் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய விக்ரம், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக்கொண்ட விக்ரம் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.

இந்நிலையில், விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ள விக்ரம், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.இந்தப் படத்திற்காக ரொம்பவே வித்தியாசமான லுக்கில் விக்ரம் மாறியது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. 

இந்தப் புகைப்படங்களில் விக்ரமின் கையில் எந்த கட்டும் இல்லாததால் அவர் விரைவில் தங்கலான் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வாரமே தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் ஓய்வில் இருந்ததால் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருந்தார் பா ரஞ்சித். இப்போது அவரும் தங்கலான் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டாராம்.

Advertisement

Advertisement