• Sep 20 2024

ரசிகர் ஒருவருக்கு காரில் இருந்தே செல்ஃபி எடுத்துக் கொடுத்த விக்ரம்- திடீரென வைரலாகும் புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூடிய முக்கிய நடிகராக விளங்குபவர் தான் நடிகர் விக்ரம். இவர் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித் வந்தார்.

இருப்பினும் இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படம் என்றால் சேது. இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்து வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்தே ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தில், காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்த இவரது நடிப்பில் சமீபத்தில் மகான் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

தற்பொழுது இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற பல படங்கள் வெளிவரவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். இந்நிலையில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்தது. எப்பொழுதும் ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கும் நடிகர்களுள் சியான் விக்ரமுக்கு முதலிடம் உண்டு என்று கூறி விக்ரமின் ரசிகர்கள் ஒரு விடியோவை பகிர்ந்து வருகின்றனர், சியான் விக்ரம் காரில் செல்லும் பொழுது, ரசிகர் ஒருவருக்கு காரில் இருந்தே செல்ஃபி எடுத்து கொடுத்த வீடியோவும், வேறு ஒரு ரசிகர் விக்ரமை போட்டோ எடுக்கும் பொழுது அழகாக போஸ் கொடுத்த த்ரோ பாக் வீடியோவையும் தற்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

விரைவில் அவர் வீடு திரும்ப வேண்டும் என்று பிராச்த்தனை செய்து வருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement