• Sep 21 2024

இரவு நேரத்தில் விக்ரம் எங்களை டார்ச்சர் செய்தார்: கோப்ரா நடிகைகள் கூறிய விசயத்தால் ஷாக்கான ரசிகர்கள்...அவரா இப்படி..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கோப்ரா படத்தில் நடித்தபோது சீயான் விக்ரம் செய்த டார்ச்சர் பற்றி மீனாட்சியும், மிருணாளினி ரவியும் பேசிய வியடம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம், கே.ஜி.எஃப். படம் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் கோப்ரா படம் ஆகஸ்ட் 31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. 

இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் விக்ரம். அவர் செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பாக இருக்கிறது.



3 ஆண்டுகள் கழித்து விக்ரம் நடிப்பில் படம் ரிலீஸாகவிருப்பதால் கோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று தான் கூற வேண்டும். விக்ரம் செல்லும் இடமெல்லாம் அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூடிவிடுகின்றது. இந்நிலையில் தான் விக்ரம் பற்றி சக நடிகைகள் பல விஷயம் கூறியுள்ளார்கள்.

கோப்ரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிருணாளினி ரவியும், மீனாட்சி கோவிந்தராஜனும் விக்ரம் பற்றி  தெரிவித்திருப்பதாவது...



இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் டயர்டாகி சேரில் உட்கார்ந்தபடியே தூங்கியிருக்கிறோம். அப்படி தூங்கியபோது விக்ரம் சார் எங்கள் முகத்தில் தண்ணீர் தெளித்துவிடுவார் என்றார்கள்.



மீனாட்சியும், மிருணாளினி ரவியும் மேலும் கூறியதாவது, நாங்கள் தூங்கியதை வீடியோ எடுத்து கிண்டல் செய்திருக்கிறார் விக்ரம் சார். அத்தோடு திடீரென்று உணவுத் தட்டுடன் வந்து சாப்பிடுமாறு கூறியிருக்கிறார். ஷூட்டிங் நடந்தபோது எங்களை கலாட்டா செய்து செல்லமாக டார்ச்சர் செய்தார் என்றார்கள்.இதனைக்கேட்ட ரசிகர்கள் விக்ரம் சேரா இப்படி சேட்டைகள் செய்தது என கேட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement