மணிரத்னத்தின் பிரம்மாண்டமான இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியீட்டிலேயே படக்குழுவினர் பிரம்மாண்டம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிள் சோழா சோழா ஐதராபாத்தில் நடந்த சிறப்பான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் மேடையேறி பேசி தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் தெலுங்கில் சரளமாக பேசி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார். இந்தப் படம் தன்னுடைய கனவு நனவான தருணம் என்று குறிப்பிட்டார்.
ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் படங்களில் இணைந்து நடிப்பது மிகுந்த பெருமையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, பிரகாஷ்ராஜ் போன்றவர்களுடன் இணைந்து நடித்தது குறித்தும் அவர் பெருமையுடன் சுட்டிக் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!