பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு ஆறாவது சீசனில் சண்டை, சச்சரவுகளும்; எந்த சீசனுக்கும் இல்லாத பேச்சும் 6ஆவது சீசனுக்கு எழுந்தது.
அதற்கு காரணம் அதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் தான் விக்ரமன் மற்றும் அசீம்.இவர்கள் இருவரில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. அதில் ரசிகர்களின் அதிக வாக்கினைப் பெற்று அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.
இந்த நிலையில் விக்ரமன் தற்பொழுது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.காதலித்து ஏமாற்றிவிட்டார் என அவர் மீது பெண் ஒருவர் வாட்சப் ஆதாரங்கள் உடன் ட்விட்டரில் புகார் கூறி இருக்கிறார்."அவரது மேனேஜராக இருக்கும் பெண் உடன் அவர் 1.5 வருடமாக தொடர்பில் இருக்கிறார். காதல் என கூறி 15 பேர் வரை விக்ரமன் ஏமாற்றி இருக்கிறார். அவர் மீது போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன்" என அந்த பெண் புகார் கூறி இருந்தார்.
பிக் பாஸ் ஷோவில் இருக்கும் போது விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான். தற்போது விக்ரமன் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் அவரை அசீம் தாக்கி பேசி இருக்கிறார்."நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என அவர் கூறி இருக்கிறார்.
Listen News!