பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூழலில் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
இதற்கு காரணம் அனைவருமே ஒவ்வொரு விஷயத்தில் தனித்துவம் வாய்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் செயல்பட்டதால் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி இருந்தார். இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருவதையும் நாம் கவனித்திருப்போம். அதே போல, பிக் பாஸ் போட்டியாளர்கள் எங்கே போனாலும் மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு அதிகம் இருந்து வருகிறது.இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இரண்டாவது இடம் பிடித்திருந்த விக்ரமன், தற்போது நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த சமயத்தில், அவரை கமல் அண்ணன் என்றே அழைத்து வந்தார் விக்ரமன். இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்துள்ள விக்ரமன், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த விக்ரமன், "இன்று மதிப்பிற்குரிய அண்ணன் திரு @ikamalhaasan அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!