பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னும் நட்பாக இருந்திருக்கலாம் என நினைக்கும் நபருக்கு கையில் சிவப்பு வண்ண பட்டை ஒன்றை கட்டுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியாளர்கள் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.
இதை தொடர்ந்து விக்ரமன் தனது குடும்பத்தினர் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கதிர் பண மூட்டையை எடுத்துக்கொண்டு 3 லட்ச ரூபாயுடன் அவர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பணப்பெட்டி வைக்கப்பட்டது.
இதனை யாராவது எடுப்பார்களா? அல்லது அனைவரும் தொடர்வார்களா? என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.பணப்பெட்டியில் இதுவரையில் 10 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் போட்டியாளர்கள் இதுபற்றி அவ்வப்போது வீட்டுக்குள் பேசி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், வீட்டுக்குள் மைனா, ஷிவின், மகேஷ்வரி மற்றும் விக்ரமன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். அப்போது ஷிவின்,"விக்ரமன் அறம் வெல்லும் சொல்றாரு. அப்படின்னா அவர் டைட்டில் ஜெயிக்க தான் வெயிட் பண்ணுவாரு. நான் காசை எடுத்துக்கிட்டு வெளியே போய்டுவேன்" என்கிறார்.அப்போது அருகில் இருந்த மைனா,"அவங்க எல்லாம் எடுத்தது போக மீதி அமௌன்ட் வரும்னு சொல்லிட போறாங்க. 50 லட்சத்தையும் அவங்க எடுத்துட்டு போய்ட்டாங்க, உங்களுக்கு கப் மட்டும்தான்னு சொல்லிட்டா சோலி முடிஞ்சது" என கலகலப்பாக கூற, விக்ரமனும் அதனை கேட்டு சிரிக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் 13 லட்சத்துடன் அமுதவாணன் அந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!