பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த விக்ரமன், Fans Meet-ல் கலந்துகொண்டார். அப்போது அவர் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது.அத்தோடு 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் இறுதி சுற்றுக்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்போதும் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைவது வழக்கம். ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைந்தனர்.மேலும் இந்த மூவரில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்களிடையே சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வந்தது. அப்போது பிக்பாஸ் சீஸனின் வெற்றியாளராக அசீமை அறிவித்தார் கமல்ஹாசன்.
இவ்வாறுஇருக்கையில், விக்ரமன் Fans Meet நடத்தப்பட்டது. இதில் விக்ரமன் தனது பெற்றோருடன் கலந்துகொண்டார். அப்போது, பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து விக்ரமன் பேசியிருந்தார். இடையே அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய சகோதரி தமிழரசி வீடியோ காலில் நிகழ்ச்சியில் இணைந்தார்.
அப்போது பேசிய தமிழரசி,"நிறைய இன்டெர்வியூ பார்க்குறேன். எல்லாரும் விக்ரமனுக்கு எப்போது கல்யாணம்னு கேக்குறாங்க? அவரை இப்போ கேக்குறாங்க என்னைய 21 வயசுலயே கேட்டுட்டாங்க. அத்தோடு அது அவரோட தனிப்பட்ட விஷயம். யாரும் ஒருத்தரோட தனிப்பட்ட விஷயங்கள்ல யாரும் தலையிட கூடாதுன்னு நெனைக்கிறேன்" என்றார். அப்போது, "இது எனக்கு வச்ச கேள்வி மாதிரி இருக்கே?" என தொகுப்பாளர் விக்ரமனை பார்த்து சிரித்தபடி சொல்கிறார்.
இதனை தொடர்ந்து பேசும் விக்ரமன்,"நான் இந்த விஷயங்கள்ல ரொம்ப SOFT. ஆனா என் தங்கச்சி ஸ்ட்ராங்கா இருப்பாங்க. அவங்க சொல்ற மாதிரி பையனுக்கு வீட்டுல கொடுக்குற சுதந்திரம் பெண்ணுக்கு கொடுக்கப்படுறது இல்ல. அத்தோடு அவங்களுக்கு என ஒரு வாழ்க்கை இருக்கு. எப்போது கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ அப்போ முடிவு எடுப்பாங்க. அந்த விதத்துல என் குடும்பம் எங்க ரெண்டு பேருக்குமே சுதந்திரம் கொடுத்திருக்காங்க. நான் தமிழ்நாட்டை தாண்டி போனது இல்ல. ஆனா என் தங்கச்சி டெல்லில படிக்கிறாங்க" என்றார்.
Listen News!