மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டாம் பாகங்களாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது.
அத்தோடு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று கூட விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் டெல்லி சென்று அங்கு ப்ரோமோஷன் செய்தனர்.
இப்படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று ஆதித்த கரிகாலன்.
இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்க நடிகர் விக்ரம் ரூ. 12 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!