• Sep 21 2024

கையும் களவுமாக சிக்கிய ஈஸ்வரி... ஆதி குணசேகரனாக மாறி மருமகள்களை வச்சு செய்யும் விசாலாட்சி... பரபரப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம். அதில் கதிர் ஈஸ்வரியிடம் "கண்டவங்க பிள்ளைகளுக்கு எல்லாம் இங்க சோறு போட்டு வளர்க்க முடியாது. இன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா இந்த புள்ள இங்கிருந்து கெளம்பனும். இல்லனா அவ்வளவுதான்" என பயங்கரமாக கத்தி மிரட்டுகின்றார்.


இதனைக் கேட்டதும் வெண்பா, என்னால தான் உங்களுக்கு பிரச்சினையா" என ஈஸ்வரியிடம் கேட்டு பீல் பண்ணுகின்றார். ஈஸ்வரி அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறார். மறுபுறம் நந்தினி மிகவும் சோகத்துடன் இருந்து "நான் கஷ்டப்படுறது கூட பரவாயில்லை. பாவம் அவங்க எல்லாரும் பட்டினியா இருந்து இருப்பாங்க அதை நினைக்கும் போது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சாரி ஜனனி என்னை மன்னிச்சுடு. எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை வாங்கி கொடுத்த ஆனா அதை காப்பாத்திக்க துப்பில்லாதவளா போயிட்டேன்" எனக் கூறி வருந்துகின்றார்.


பதிலுக்கு ஜனனி "இது ஒரு வெறும் தடங்கல், இத்தோட எல்லாம் முடிஞ்சதா அர்த்தம் இல்லை. அதில் இருந்து எப்படி மீண்டு வெளியில் வருவது என்பதை மட்டும் யோசியுங்க" என்கிறார். அதற்கு தர்ஷினி உட்பட மற்றவர்கள் "உங்களுக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் நீங்க இருக்காதீங்க. நீங்க இல்லனா இந்த வீடு எப்படி இருக்கும் என அவங்களுக்கு புரியனும், உங்களால எங்க சந்தோஷமா இருக்க முடியுமோ அங்கே போங்க" என்கிறார்கள்.

அத்தோடு "எங்களை பத்தி கவலை படாதீங்க. நாங்க எங்களை பார்த்து கொள்கிறோம், ஜனனி சித்தி நீங்க தானே ஐடியா குடோன். பட்டுனு ஏதாவது யோசிச்சு டக்குனு இவங்க எல்லாரையும் தூக்குங்க" என்கிறார் தாரா. மறுநாள் காலை ஈஸ்வரியைத் தேடி வந்த பெண் "அடுத்த வாரம் ஈஸ்வரி மேடமுக்கு காலேஜில் ஒரு லெக்ச்சர் இருக்கு. அத சொல்றதுக்காக தான் வந்தேன்" என சொல்கின்றார்.


இதனைக் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் விசாலாட்சி "வீட்ல யாருக்கும் தெரியாம களவாணி தனம் பண்றீங்களாடி. எத்தனை நாளா இது நடக்குது? என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம பேசி வீட்டை விட்டு அனுப்பிட்ட. அதை பத்தி கொஞ்சகூட கவலை படல. நீயும் உன்னோட பிள்ளைகளும் ஊதாரி தனம் பண்றதுக்கு திருட்டுத்தனமா காசு சேக்குறீங்களா" தாறுமாறாக கேவலமாக திட்டுகின்றார்.

அதுமட்டுமல்லாது "இந்த வீட்டுக்கு பொம்பளைங்க இனிமே வீட்டு வாசலை தாண்ட மாட்டாளுங்க. அவ எங்கேயும் வரமாட்டா வரவும் முடியாது. இனிமே இவளுங்கள தேடிகிட்டு யாரும் வரக்கூடாது" எனக்கூறி அந்தப் பெண்ணையும் துரத்தி விடுகின்றார். குணசேகரன் இல்லாத குறையை தீர்க்கும் வகையில் குடும்பத்தை விசாலாட்சி மிரட்டி வைத்திருப்பது தெரிகிறது. 


பின்னர் ஞானம் ரேணுகாவிடம் "இன்னும் நீ என்ன திருட்டுத்தனம் செய்யுறனு தெரியல. தெரிஞ்சதுக்கு அப்புறம் சந்தி சிரிச்சுடும் ஜாக்கிரதை" என மிரட்டுகின்றார். இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்துள்ளது. மொத்தத்தில் இதுவரை பதுமையாக இருந்து வந்த விசாலாட்சி இப்போ ஆதி குணசேகரனாகவே மாறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  

Advertisement

Advertisement