இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்கின்றார். அத்தோடு இப்படத்திற்கு ஜு.வி பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படம் செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸாகவிருந்தது. இந்நிலையில், 'மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது.அதாவது, பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால் தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்ததோடு அவரை நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து விஷாலும் இன்றைய தினம் நேரில் ஆஜராகி இருக்கின்றார்.நீதிபதியினால் கோரப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் விஷால் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்வரும் 19-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மார்க் ஆண்டனி படத் தயாரிப்பிற்கும் விஷாலிற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமையினால் அந்த படத்தை வெளியிடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மேலும் அடுத்த விசாரணையில் விஷால் நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Listen News!