நடிகை தனுஸ்ரீ தத்தா உயிருக்கு ஆபத்து என பதிவிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்துப் பிரபலமானவரே நடிகை தனுஸ்ரீ தாத்தா.
இவர் நடிகை மட்டும் அன்றி இந்திய மாடல் அழகியாகவும் இருந்திருக்கின்றார். பிரபல பாலிவுட் நடிகையான இவர் அடிக்கடி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது வழக்கம்.
குறிப்பாக 2018-ஆம் ஆண்டு நடிகைகள், மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் metoo பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தனர்.
இதில் தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். அதாவது இவர் தன்னை நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருந்தார்.
இந்நிலையில் இன்று தனுஸ்ரீ தத்தா இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியான பதிவை போட்டிருக்கிறார்.
மேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், தனக்கு எதாவது நேர்ந்தால் அதற்கு நானா படேகர் மற்றும் அவரது பாலிவுட் மாபியா தான் பொறுப்பு என குறிப்பிட்டு இருக்கிறார்.
இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற செய்திகள்
- முக்கிய பட ஷூட்டிங்கில் அஜித்திற்கு ஏற்பட்ட காயம்-பிரபல இயக்குநர் பகிர்ந்த விடயம்..!
- காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
- விஜய் சேதுபதி -ஹெச் வினோத் இணையும் படம்…வெளியானது சூப்பர் அப்டேட்; குஷியில் ரசிகர்கள்..!
- சிறந்த நடிகையாக உங்களுக்கு தெரியும்-மாணவி சமந்தாவின் சாதனை பற்றி தெரியுமா..?
- நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா-இது தான் காரணமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!