• Sep 20 2024

விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிடத் தடை- இது தான் காரணமா?- அதிர்ச்சியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்கின்றார். அத்தோடு இப்படத்திற்கு ஜு.வி பிரகாஷ் இசையமைக்கின்றார்.

 இந்த படம் செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் நடந்த  நிலையில், இப்படத்தில் ட்ரைலர் பலரையும் கவர்ந்து பல மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.


இந்நிலையில்,  ’மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது.அதாவது, பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால்  தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை  நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனராம். அத்தோடு விஷால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கொண்டு வந்தால் மட்டுமே மார்க்ஆண்டனி திரைப்படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement