மொட்டை மாடியில் வித்தியாசமான கவர்ச்சி காட்டி போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி ,பிக்பாஸ் சீசன் 4 எனப் ல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.
தொடர்ந்து பட வாய்ப்புக்களைப் பெற்று நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது இவர் தன்னுடைய சொந்தங்களுடன் இணைந்து தனது தாத்தாவின் 93 வது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கின்றார்.
இது குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர் கூறியதாவது நேர்மை, கடின உழைப்பு, நண்பர், தத்துவஞானி மற்றும் சாமர்த்தியமான ஆலோசகர், உங்கள் உறவினர்கள் மீதான அன்பு, 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நம் தேசத்திற்கு சேவை செய்த உங்கள் நற்பண்புகளால் தாத்தா எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தவர். ஏனென்றால், நம் நாடு எதற்கும் அடுத்தது இல்லை, புத்திசாலித்தனமான இதயம், இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காணும் திறன் ஆகியவை என் குழந்தை பருவத்திலிருந்தே என்னைக் கவர்ந்த ஒன்று.
எல்லாவற்றிற்கும் மேலாக, சொந்தத் தொழிலில் ஈடுபடுவதே அமைதியான வாழ்க்கையின் முன்னோடி என்பதை எங்களுக்குச் சொல்ல நீங்கள் ஒரு வாழ்க்கை உதாரணம் ... நீங்களும் உங்கள் வாழ்க்கையும் எங்களுக்கும் வரவிருக்கும் தலைமுறைக்கும் உயர்தரத்தை அமைக்கும் ஒரு அளவுகோல். நான் உன்னை வணங்குகிறேன் என்பது கணக்கிட முடியாதது என்றும் பதிவிட்டு தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.
Listen News!