தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர், செல்வராகவன். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம், இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இந்த படத்தை தொடர்ந்து, 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'இரண்டாம் உலகம்' போன்ற பல வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இவர் தன்னுடைய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.பின்னர், தன்னுடைய துணை இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். தற்போது இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இப்போது இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக பகாசூரன் என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் குடும்பத்துடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கின்றார். இவரின் இந்த பிறந்தநாளில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!