பிக்பாஸ் சிசன் 7 ஆம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இந் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் காெண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆண்டவருடனான சந்தப்புடன் ஆரம்பமாகி இருந்தது.
விஷ்ணு கமலிடம் பேசும்போது 'சுயபுத்தி இல்லாதவர்' என்ற பட்டம் இந்த வாரத்திற்கு ஜோவிகாவுக்கு தான் கொடுத்திருப்பேன் என கூறினார். கமல் காரணம் என்ன என கேட்க தான் மட்டும் தான் தனியாக தெரியவேண்டும் என ஜோவிகா எல்லா இடங்களிலும் மூக்கை நுழைக்கிறார் , எல்லாவற்றிற்கும் தானே முன்நிற்க வேண்டும், தான் சொல்வதையே மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனாலையே என விஷ்ணு கூறினார்.
இதனை வைத்து ஜோவிகா விஷ்ணு உடன் வாக்குவாதத்தை தொடங்கினார்.அப்போது வாடா, போடா என ஜோவிக கதைப்பது தவறு என்றும், மரியாதை குறைவாக கதைக்க கூடாது என விஷ்ணு சாெல்ல ஜோவிகா அதை மறுத்து பேசியிருக்கின்றார். இதனால் விஷ்ணு டென்ஷன் ஆகி . 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா. யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்துகொண்டு பேசு' என சொல்லி திட்டிவிட்டார்.
Listen News!