தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமான பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் விவேகம் என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் நடிகர் விவேக் ஓபராய் .பாலிவூட் நாயகனாக இவர் இப்படத்தில் அஜித்தின் வில்லனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படவாய்ப்புகள் வந்ததால் அதில் அவர் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் விவேக் ஓபராய் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். தான் நடத்தி வரும் நிறுவனத்தின் பிஸ்னஸ் பார்ட்னர்கள் தன்னை 1.5 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றிவிட்டார்கள் என புகார் தெரிவித்து இருக்கிறார்.
2017ல் Oberoi Organics என்ற பெயரில் விவேக் ஓபராய் நிறுவனம் தொடங்கியதோடு அதற்கு ஈவென்ட் ஆர்கனைசிங் தொழில் செய்து வரும் சஞ்சய் சாஹா, அவரது அம்மா நந்திதா சாஹா மற்றும் ராதிகா நந்தா ஆகியோரை பார்ட்னர்களாக சேர்த்திருக்கின்றார்.
அந்த நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் எல்லோரும் சேர்ந்து Anandita Entertainment என்ற பெயரில் பட தயாரிப்பு மற்றும் event organising நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.அந்த நிறுவனத்தின் பணிகள் அனைத்தையும் விவேக் ஓபராயின் பார்ட்னர்கள் தான் கவனித்து வந்திருக்கின்றனர். அவர்கள் மோசடியாக பணத்தை சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்தி ஏமாற்றி இருப்பது ஒருகட்டத்தில் ஓபராய்க்கு தெரியவந்திருக்கிறது.
அதிகம் லாபம் வரும் என முதலீடு செய்ய வைத்து, அந்த பணத்தை அவர்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக தற்போது விவேக் ஓபராய் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இதனால் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!