அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் தலைவர்.
அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.அதனுடைய போஸ்டர் போட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.
இந்த படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இதுதவிர ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.அதனால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இன்னும் பல சுவாரசியங்கள் படத்தில் உள்ளதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் முழு படத்தையும் போட்டு பார்த்த தலைவர் ரஜினி முழு திருப்தியாம்.அந்த அளவு நல்லா வந்து உள்ளதாம் ஜெய்லர்.அதனை போல கண்டிப்பாக இது ஹிட் அடிக்கும் என நம்பிக்கையில் உள்ளாராம்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகிற 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.இதுவும் ஜாலி சாங் போல தான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோ வெளியான முதல் யார் இந்த பாடலை பாடியது என்ற கேள்வி வந்தது அதற்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது அதன் படி ஷில்பா என்பவர் தான் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Listen News!