கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். வில்லியாக நடித்த இவர் முதன் முதலாக ரஜனிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அத்தோடு இப்படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில் பேசிய ரஜனிகாந்த் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் இப்படத்தில் வில்லனாக யார் நடிக்க வேண்டியது என்பது குறித்தும் பேசியிருந்தார்.அந்த நபர் தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், அவரிடம் என்னை தான் பேச சொன்னார்கள்.
நான் பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். ஆனால் மறுநாள் அவர் வில்லனாக நடித்தால் அடிக்க வேண்டியிருக்குமே என தோன்றியது. உடனே நெல்சனுக்கு போன் போட்டேன் அவரும் அதையே சொன்னார்.
அதன்பின்னர் அந்த நண்பருக்கு அழைத்து இதனை எடுத்துக்கூறினேன், உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க என அவரும் பெருந்தன்மையோடு சொன்ன பின்னர் தான் அந்த வில்லன் கேரக்டரில் விநாயகனை நடிக்க வைத்தோம் என பேசி இருந்தார். ரஜினி அடிக்க பயந்த அந்த நண்பர் வேறுயாருமில்லை, நம்முடைய உலகநாயகன் கமல்ஹாசன் தான். இதை அறிந்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தால் செம்ம மாஸ் ஆக இருந்திருக்குமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!