தமிழ் சினிமாவில் தமது குரலினால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பல பாடகர்கள் வலம் வருகின்றனர். இவர்களில் தற்பொழுது ட்ரெண்டிங் பாடகியாக வலம் வருபவர் தான் மானசி.இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரி திரைப்படத்தில் இடம் பெறும் ரஞ்சிதமே பாடலைப் பாடியுள்ளார்.
இப்படம் சில தினங்களுக்கு முதல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ரஞ்சிதமே பாடலை மானசியுடன் சேர்ந்து தளபதி விஜய்யும் பாடியுள்ளார். இது தவிர புலி ,அன்னைக் கொடி ,ஆரம்பம் ,அஞ்சான், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ,வானம் ,காக்கி் சட்டை , சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.
இந்த நிலையில் இவர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சன்டிவியில் பல வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் கவிதை போல வந்தாளே ரோஜா என்னும் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மானசி தமிழைத் தவிர தெலுங்கு ,ஹிந்தி அகிய மொழிகளிலும் பல பாடல்களைப் பாடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!