தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமூகவலைத்தளங்களில் அதிகம் நெகட்டிவிட்டி இருப்பதால் எந்தவொரு சமூக வலைதளத்திலும் கணக்கு தொடங்காமல் ரொம்பவே பிரைவேட் பர்சனாக இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று திடீரென நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கை தொடங்கி முதன்முறையாக தனது அழகு குட்டிச் செல்லங்களான உயிர் மற்றும் உலகத்தின் முகத்தையே காட்டிய நிலையில், அதற்கு பின்னாடி இப்படியொரு வியாபார தந்திரமும் இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை நயன்தாரா திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். முதல் போஸ்ட்டே தனது உயிர் மற்றும் உலகத்துடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு அதற்கு ஜெயிலர் பாடலை எல்லாம் போட்டு அலப்பறையை கிளப்பி விட்டார் லேடி சூப்பர்ஸ்டார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமுக்கு நடிகை நயன்தாரா திடீரென என்ட்ரி கொடுக்க இப்படியொரு பின்னணி இருப்பதை அவரே வெளிப்படையாக அடுத்தடுத்த போஸ்ட்டுகளில் அறிவித்து விட்டார்.
முதல் போஸ்ட்டுக்கு பிறகு அடுத்தடுத்து ஜவான் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை வரும் 7ம் தேதி மறக்காமல் ஜவான் படத்தை பார்க்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியொரு விஷயத்தை இவர் இதற்கு முன்பாகவே செய்திருந்தால் விஜய்யின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு பலமாக அமைந்திருக்குமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Listen News!