• Sep 20 2024

மாவீரன் திரைப்படம் யோகிபாவுக்காக எழுதப்பட்டதா?- தெரிந்தே ஏமாற்றிய சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்பொழுது கதையின் நாயகனாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் யோகிபாபு.இவர் நடித்து வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.இதனால் இவருக்காக இயக்குநர் பினோ சுப்பிரமணியன் ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார்.

இந்த இயக்குநர், பெரிய பெரிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து பல படங்களில் வேலை பார்த்தவர். அப்படிப்பட்ட இவர் அப்பார்ட்மெண்ட் என்ற ஒரு கதையை உருவாக்கி அதில் எலக்ட்ரீசியன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அதற்கு தகுந்த நாயகனாக யோகி பாபுவை நினைத்து எழுதியிருக்கிறார். அந்த படத்தின் கதை தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன்.


பின்பு அந்த இயக்குநரின் கதை பல பேரிடம் கை மாறி இருக்கிறது. அதாவது சூரி மற்றும் ஆர் ஜே பாலாஜி அவர்களை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இப்படத்தின் கதை மிக நன்றாக இருந்ததால் பெரிய பெரிய தயாரிப்பாளர்களின் கைக்கு போய் இருக்கிறது. 

பின்பு இந்த கதையை திருடி அந்த இயக்குநரை ஏமாற்றி படமாக எடுக்கப்பட்டது.இந்த விஷயம் சிவகார்த்திகேயனுக்கு தெரிந்து தான் இதை செய்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சம்பந்தப்பட்டவருக்கு கொஞ்சம் கூட பணம் கொடுக்கவில்லை. எப்படி சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்பொழுது இந்த பிரச்சினை பேசப்பட்டு வருகின்றது.


ஆனால் இப்பொழுதும் வாயே திறக்காமல் வெற்றியை மட்டும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு தேவை இப்படத்தின் மூலம் பணம், புகழை சம்பாதிக்கணும், அதற்காக அந்த இயக்குநர் கதையை பயன்படுத்திக் கொண்டு மட்டமாக வெற்றியை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement