• Sep 21 2024

"அவர் கிட்ட ரொம்ப கெஞ்சினோம்"... பீட்டர் பாலின் இறப்புக் குறித்துக் கண் கலங்கிய மகன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதாவின் 3-ஆவது கணவரான பீட்டர் பால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதாவது அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தினால் அவரின் கல்லீரல், நுரையீரல் என்பன பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் சரியான ட்ரீட்மென்ற் எடுக்க முடியாமல் போனதால் உயிரிழந்திருந்தார். இதற்கு அவரின் முதல் மனைவி மற்றும் வனிதா ஆகியோர் தங்களது வருத்தத்தினை சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பீட்டர் பால் அவர்களின் மகனும் தனது அப்பா பற்றி ரொம்ப எமோஷனலாக கூறியுள்ளார். அதாவது "என்னுடைய அப்பா ரொம்பவே நல்ல மனிதர், அவர் இப்போ இருக்கிற மாதிரி அப்போ இருந்தது கிடையாது, எங்களுடைய குடும்பத்தை ரொம்ப நல்லாவே பாத்திருக்கார்.


நாங்க எது கேட்டாலுமே எங்களுக்கு வாங்கி வந்து தருவார், எங்களுக்கு எந்தக் குறையும் வைச்சது இல்லை, ரொம்ப நல்ல படியாகத் தான் எங்களுடைய லைஃப் போய்க்கிட்டு இருந்திச்சு, அவரிடம் இருந்த ஒரே ஒரு மைனஸ் என்றால் அது குடிப்பழக்கம் மட்டும் தான், கொஞ்சம் அளவுக்கதிகமாக குடிப்பாரு, ஆனால் அதையும் எங்க அம்மா ஓரளவிற்கு சமாளிச்சு கொண்டு வந்தாரு.

இடையில் ரொம்பத் தடுமாறிய ஒரு விடயம் என்றால் அவர் திருமணம் பண்ணியது தான், நாங்க யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை, இவர் இப்படி ஒரு செயல் செய்வார் என்று, அது எங்களுக்கு ரொம்ப ஷாக்கிங்காக இருந்திச்சு, அதனால் தான் நாங்க அவர்கிட்ட ரொம்பவே கெஞ்சினோம், ஆனால் அதை அவர் அதை உதாசீனப்படுத்திட்டார்" என்றார்.


மேலும் "ரொம்பநாள் கழிச்சு அந்தத் திருமணத்தாலேயும் மிஸ் அண்டஸ்ராண்ட் வந்து வெளிய வந்திருக்கார். அப்போ எங்க கிட்டேயும் வராமல், அவங்க கிட்டேயும் போகாமல் ரொம்ப டிப்பிரேஷனில் இருந்திருக்கார், தனி ரூமில் இருந்ததால் அளவுக்கதிகமான குடிப்பழக்கம் இருந்திருக்கு, ஆனாலும் கடைசி கால கட்டத்தில் எங்க கிட்ட வந்திட்டார், அப்பாவை நாங்க கொண்டு திரியாத ஹாஸ்ப்பிட்டலே கிடையாது, இருந்தாலும் அவரை எங்களால் காப்பாற்ற முடியாமல் போய்ட்டு, அவர் தன்னுடைய கடைசிக் காலத்தில் நிறைய விடயங்கள் மனமுருகிப் பேசியிருக்காரு" எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் பீட்டர் பாலின் மகன்.

Advertisement

Advertisement