பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். பின்பு பவா செல்லத்துரை தானாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வித்தியாசமான குணத்துடன் இருப்தனால் அவரை அதிக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. கடந்தவாரம் பிரதீப்புக்கும் நிக்ஸனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. இந் நிலையில் இது தொடர்பாக இயக்குனர் டீ.ஆர் பாலா பிரபல ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பாக பேட்டி வழங்கியிருந்தார் . அதில் என்ன சொல்லி இருக்கின்றார் என பார்க்கலாம்.
பிரதீப் கேம் என்ன என தெரிஞ்சிட்டே விளையாடுறாரு எப்படி விளையாடனும், யாரிடம் எமோஷ்னலாக பேசனும், பேச கூடாதுன்னு தெரியும் ஆனால் இவன் அப்படி இல்லை. எல்லோரிடமும் நெருக்கமாக பழகுவான். பிரதீப் அன்ரனியை விட நிக்ஸன் சார்ப் என்பது எங்களுக்கு தான் தெரியும்.எந்த நேரத்தில் என்ன செய்னும், எப்படி பேசனும் என அவனுக்கு தெரியும். நிக்ஸன் திறமையானவர் பிக்பாஸ் வீட்டில் பார்க்கும் போதே தெரியும். ஆனால் அடிச்சிட்டு உள்ள வந்த பிரதீப்புக்கு கேம் மட்டும் தான் தெரியும். என கூறியிருக்கின்றார்.
Listen News!