• Sep 20 2024

நேற்று தானே பார்த்தோம், அதுக்குள்ள என்ன அவசரம் சேர்- நடிகர் மாரிமுத்து இறுதியாக யாருடன் போட்டோ எடுத்துக் கொண்டார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக திரை வாழ்க்கையை தொடங்கியவர் மாரிமுத்து.பின்னர், மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கி இயக்குநராக மாறி மாரிமுத்து இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்த மாரிமுத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில், ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் தனது காட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மாரிமுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.


இன்று காலை டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் எல்லோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.அத்தோடு இவரது உடல் தகனம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


மேலும் இவர் திடீரென உயிரிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் நேரில் சென்று தமது அஞ்சலியை செலுத்தி இருந்தனர். இப்படியான நிலையில் இதில் நந்தினி என்னும் காரெக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா,அவருடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு நேற்று தான் இந்த போட்டோவை எடுத்தோம். அதுக்குள்ள என்ன அவசரம் சேர் என கூறியுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement