• Sep 20 2024

கடன் பிரச்சினையால் நாங்கள் குடும்பத்தோட வெளிநாட்டுக்குப் போயிருந்தோம்- திடுக்கிடும் தகவலைக் கூறிய வனிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா. இவர் சில திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டதால் நடிப்பிலிருந்து விலகி விட்டார். மேலும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால் சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸின் மூலம் மீண்டும் சினிமாவில் அறிமுகமாகினார். அத்தோடு சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது

என்னுடைய வாழ்கையில் மறக்கவே முடியாத தருணம் என்றால் அது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றது தான்,நான் எங்க குடும்பத்தோடு சேர்ந்து முதல்ல போன பயணம்.அந்த ஒரு நாள் தான் நான் எங்க அப்பா மற்றும் சகோதரிகள் என்று அனைவருமே ஒரே கலர்ல டிரஸ் போட்டிக்கிட்டு கிளம்பினோம்,

ஆனால் அந்த ஒரு நாள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள் என்பது தான் உண்மை. எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே அப்பா நடித்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்கு முன்னாடியே ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னாடி நாங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தோம்.

ஆனால் எங்க அப்பா தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்த காலத்தில் ராஜினி அவர்களுடன் தான் சேர்ந்து நடிப்பார். அந்த காலத்தில் ரஜினி அங்கிளும் அப்பாவும் நெருக்கமான நண்பர்கள் ஆவார்கள். இருவரும் படம் நடித்தார் சேர்ந்து தான் நடிப்பார்கள், அதில் அப்பா விஜயகுமார் நெகடிவ் கதாப்பாத்திரத்திலும் ரஜினி அங்கிள் ஹீரோவாகவும் தான் நடிப்பார்கள். அப்பா வந்து கொஞ்சம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.

அப்ப கொஞ்சம் ஃபைனான்ஷியல் பிரச்சனை ஏற்பட்டது.ஆனால் எங்க அப்பாவை விட எங்க அம்மா தான் எங்களுக்கு மிகவூம் பிடிக்கும் எங்க அப்பா படப்பிடிப்பிற்கு சென்று விட்டார் எங்க அம்மா தான் தனி ஒரு ஆளாகவே எங்கள் அனைவரையும் கவனித்து வருவார். அமெரிக்காவில் எங்களை செட்டில் ஆகவைத்து எங்கள் அனைவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைத்தார் எங்க அப்பா விஜயகுமார்.அமெரிக்காவில் நாங்கள் மஞ்சுளா சவுத்என்று ஒரு பிரபலமான ஹோட்டல் வைத்திருந்தோம் அந்த ஹோட்டலில் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் அதிகமாக வந்து சாப்பிடுவார்கள்.அந்த அளவிற்கு உணவு பிரமாதமாக இருக்கும். எங்க அம்மா தனியாக நின்று மொத்த குடும்பத்தையும் பார்த்து கொண்டார்கள். அந்த வயதில் அந்த கஷ்டமான சூழ்நிலையில் எங்க அம்மா சாதித்தார்கள். என்னால் மறக்க முடியாது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement