• Sep 20 2024

திருமண நாளில் டூர் சென்ற தம்பதிகளுக்கு அடித்த ஜாக்பாட்- நடிகர் அஜித்துடன் விமானத்தில் பயணம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டாது ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றார்.சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. 

இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். 


துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்து நடிகர் அஜித், வெளியூருக்கு இன்று விமானம் மூலம் சென்றுள்ளார். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில்  அஜித் இருக்கும் புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

விமானத்தினுள் நடிகர் அஜித்தை சந்தித்த ரசிகர்கள் இருவர் அது தொடர்பாக ஒரு வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், முதலாமாண்டு திருமண நாளில் சென்னை டூ டார்ஜிலிங் செல்லும் போது விமானத்தில் நடிகர் அஜித்தை தம்பதியர் மனோஜ் சாமுவேல் & ரஞ்சினி ஶ்ரீபதி சந்தித்துள்ளனர்‌.


 மேலும் ரஞ்சினி நடிகர் அஜித்தை கண்டதும் "அண்ணா ஹாய் அண்ணா" என எமோஷனல் ஆகி அழைப்பதும், விமானத்தினுள் அமர்ந்து இருக்கும் அஜித் குமார் அதற்கு ரியாக்ட் செய்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும் தான் விஜய் ரசிகர். இந்த வீடியோ பார்த்த பிறகு விஜய் சார் என்னை அழைப்பார் என மனோஜ் சாமுவேல் கூறுகிறார். மேலும் "தான் ஒரு விஜய் ரசிகர், அஜித் சார் முன் போட்டோ எடுக்கும் போது கை கட்டியதை எடுத்து விட சொல்லி கேஷூவலாக இருக்க சொன்னார்" என்றும் மனோஜ் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement