உதயநிதி கொடுத்த வாய்ப்பு குறித்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடந்த 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான கலை நிகழ்ச்சிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை நிகழ்ச்சிகளாக 3 நேரம் நேரலை செய்யப்பட்டது.
இந்த கலை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.அத்தோடு பிரபலங்கள் பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்திக் கொடுத்தது குறித்து கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி கொடுக்கும் வாய்பை பெற்றது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து பிடித்ததால் உதயநிதி அண்ணா அழைத்து பேசினார்கள்.
அப்போது தான் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவது குறித்து கேட்டார்கள். இதுதொடர்பாக ஒரு மீட்டிங் நடைபெற்றது.அந்த மீட்டிங்கில் பங்கேற்றேன். அப்போது நேப்பியார் பாலத்திற்கு செஸ் போர்டு போல் பெய்ண்ட்டிங் அடிக்க வேண்டும் என்பது போன்ற சில ஐடியாக்களை தெரிவித்தேன்.
இதனை பெரிய ஈவன்ட்டாக நடத்த வேண்டும் என்று உதய் அண்ணாதான் கூறினார்கள். திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது, இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நன்றி கூறினேன்.வெல்கம் ஆந்தம்மில் முதல்வர் ஸ்டாலினை நடிக்க வைப்பது எளிமையாக இருந்தது. சராசரி மனிதரிடம் பேசுவது போல் அவரிடம் பேச முடிந்தது.
அத்தோடு அரசின் அதிகாரத்தால் நேப்பியார் பாலத்தில் உடனடியாக பெய்ண்டிங் பண்ண முடிந்தது. 3 மணி நேரத்தில் முதல்வரை வெல்கம் ஆந்தத்தில் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
விஸ்வநாதன் ஆனந்தும் மற்றும் பிரக்ஞானந்தும் ஸ்பெயினில் இருந்ததால் அவர்களால் அப்போது வர முடியவில்லை, ஆனால் மெயின் வீடியோவில் அவர்களின் வீடியோவை சேர்த்துவிட்டோம்.அத்தோடு முதல்வரை வைத்து ஷூட் செய்தது எக்ஸைட்டிங்காக இருந்தது. 3 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களை எண்டெய்டெய்ன் செய்ய வேண்டும்.
மேலும் அது எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதால் பேச்சை குறைத்து கொண்டு விஷ்வாலாக கொடுத்தோம். தலைமை செயலாளர் இறையன்பிடம் ஸ்க்ரிப்ட்டை காட்டினோம்.தமிழ்நாட்டை பற்றிய அந்த ஸ்க்ரிப்ட் 45 நிமிடம் வந்தது. பின்னர் அதனை சுறுக்கி 15 நிமிடம் மாற்றினோம் என்றார்.
அவரின் இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் பலர் நயன்தாராவுக்கு உதயநிதி திருமணம பரிசாக விக்னேஷ் சிவனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்
- பிரபல நடிகரின் மகள் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பம்..!
- அன்புச்செழியனை தொடர்ந்து 4 முன்னணி பட தயாரிப்பாளர்களிடம் ஐடி ரெய்டு…அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்..!
- மீண்டும் துவங்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..வைராலாகும் புகைப்படம்..!
- பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் திடீரென புகுந்த வருமான வரித்துறை -தமிழ் திரைப்பட வட்டாரங்களில் பரபரப்பு
- “எதிலும் தனிப்பாணி..நான் சீனியர்னு அவரே பாராட்டிட்டாரு…இனி பார்” - மறைமுகமாக எச்சரித்த பார்த்திபன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!