• Sep 20 2024

ஜீவாவை பலபேர் முன்னிலையில் அடித்து துவைத்த ப்ரியா-பரபரப்பு திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே சீசன் 2

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2. மேலும் இந்தத் தொடரின் முதல் சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசனும் பரபரப்பான எபிசோட்களை தந்து வருகிறது. திருமணத்தின்போது ப்ரியா கடத்தப்பட, ஜோடி மாறி திருமணம் நடைபெறுகிறது. எனினும் இதையடுத்து ஒருவரையொருவர் காதலித்து வந்த ஜீவா மற்றும் காவ்யா, ப்ரியா மற்றும் பார்த்தியுடன் மனதளவில் ஒன்ற முடியாமல் தவிப்பதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறுஇருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவா மற்றும் பார்த்தியின் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த தன்னுடைய மாமனாரின் நண்பர், தன்னையும் ஜீவாவையும் ஹோட்டல் அறையில் வைத்து பார்த்து அட்வைஸ் செய்த நபர் என்பதை காணும் காவ்யா, கோயிலில் இருந்து வெளியேறுகிறார். மேலும் அவர் தன்னுடைய மாமியாரிடம் உண்மையை கூறிவிட்டுத்தான் செல்கிறார். ஆனால் இவ்வாறு தன்னுடைய மகனுக்கு காவ்யா துரோகம் செய்ததை நினைத்து அவர் அதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்.

காவ்யா தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற தாலியையும் அவர் மறைத்த நிலையில், காவ்யா மீது ஒட்டுமொத்த குடும்பமும் கோபம் கொள்கிறது. திருமணமும் நிற்கிறது.எனினும்  இதையடுத்து காவ்யா வீட்டிற்கு வர, அவரிடம் குடும்பத்தினரின் கோபம் எதிரொலிக்கிறது. மேலும் அவர் தனது நிலையை கூறக்கூட வாய்ப்பு தராமல், பார்த்தி, காவ்யா முன்னதாக கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார்.



ஆனால் தற்போது இதை ஏற்கும் மனநிலை காவ்யாவிற்கு இல்லை. இதனிடையே, காவ்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாறுமாறாக குடிக்கும் ஜீவா, காவ்யாவை தன்னிடம் இருந்து பிரித்த சாமியிடம் சென்று முறையிடுகிறார்.மேலும்  அவரை தடுக்கும் அவரது மாமா மற்றும் கோயில் குருக்களையும் பிடித்து தள்ளிவிடுகிறார். இதனால் அந்த இடத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அவரை தடுக்க முடியாமல் அனைவரும் நிற்கின்றனர்.



இதனிடையே கோயிலில் சாமி கும்பிட வந்து, அடிப் பிரதட்சனம் செய்யும் பிரியா, ஜீவா குடித்துவிட்டு செய்யும் கலாட்டாவால் கோபம் அடைகிறார். இதனைத் தொடர்ந்து ஜீவாவை கன்னத்தில் நான்கைந்து முறை ஓங்கி அறைகிறார். இதையடுத்து இந்த விஷயம் குறித்து கேள்விப்படும் ஜீவாவின் அம்மா, எது எப்படி இருந்தாலும் பலபேர் முன்னிலையில் ஜீவாவை பிரியா அடித்தது தவறு என்று சொல்கிறார்.



இதனைத் தொடர் பிரியா செய்த செயலுக்காக அவரை ஜீவாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால் தான் செய்தது தப்பு இல்லை என்று கூறும் ப்ரியா, ஜீவாவிடம் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாதென்று தனது மாமியாரிடம் சொல்கிறார். இவ்வாறு தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. ஏற்கனவே காவ்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது ப்ரியாவின் வாழ்க்கை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.



Advertisement

Advertisement