தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார் என்பது தெரிந்ததே.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ஆரம்பம், லாரன்ஸுடன் காஞ்சனா 2, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் அமோக வரவேற்ப்பை பெற்றார்.
இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பேசப்படுபவர்.
அந்தவகையில் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை குறி வைத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் தயாரித்து, நான்கு பெண்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தை பற்றி பேசியுள்ளார்.
இதில் " திரையில் எப்போதும் காண கிடைக்காத கதைகளை ரசிகர்களுக்கு சொல்ல முயற்சித்திருக்கிறோம். சுதந்திரம் சொந்தமாக இருக்க வேண்டும். அது கொடுக்கப்பட கூடாது என்பதை உணர்ந்த 4 பெண்களின் கதைதான் இப்படம் " என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- ரசிகர்களுடன் நிற்கும் நடிகர் அஜித்- திடீரென டுவிட்டரில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
- ‘காத்திருங்கள் இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் இருக்கு’ -புதிய அறிப்பை வெளியிட்ட இளையராஜா
- நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு-இது தான் காரணமாம்..!
- டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா..!
- அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே மாறிய நபர்.. வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!