தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலயமானார்.
இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் 'மான்ஸ்டர்'என்ற படத்திலும், கார்த்தியுடன் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்திலும், அருண் விஜய்க்கு ஜோடியாக 'மாஃபியா' போன்ற படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார்.
அதுமட்டுமல்லாது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யானை, திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட்டானமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோயின் ஆக வலம் வருபவர் என்றால் அது நம்ம ப்ரியா பவானி சங்கர் தான்.
இவ்வாறாக பல படங்களில் வருகின்ற ப்ரியா பவானி சங்கரின் கைவசம் தற்போது ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்', ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அகிலன்', எஸ்.ஜே.சூர்யா உடன் 'பொம்மை', சிம்புவின் 'பத்து தல', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' எனப் பல படங்கள் உள்ளன.
திரையுலகில் ஓய்வின்றி நடித்து வந்த இவர், தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருக்கின்றார். அதாவது தனது காதலன் உடன் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர், அங்கு ஜாலியாக தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் அவர் ஸ்கை டைவிங் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளமைக் குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து குதித்தபோது எடுத்த வீடியோவை தான் பிரியா பதிவிட்டுள்ளார். முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறித்து தனது அனுபவத்தையும் அந்த வீடியோவில் மிக அழகாக பகிர்ந்துள்ளார்.
நம்ம ப்ரியா செம்ம தில்லாக ஸ்கை டைவிங் செய்திருந்தமைக்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அந்த அழகான காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!