தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சாண்டி. இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராக பணியாற்றி பின்னர் தனது அசத்தலான திறமையால் பெருமளவில் முன்னேறி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் சாண்டி மாஸ்டர்.
படங்களில் நடிகர், நடிகைகளின் நடிப்பினை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பதை போலவே இவரின் நடிப்பினை ரசிப்பதற்கும் ஒரு கூட்டம் உண்டு. அந்தவகையில் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதிகளவிலான திரைப்பிரபலங்கள் இவரிடமே நடனம் கற்றுக் கொள்கின்றனர்.
மேலும் சாண்டி மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இங்கு சக போட்டியாளர்களான தர்ஷன், கவின், முகேனுடன் சேர்ந்து செய்த சேட்டைகள், கலகலப்பான காமெடிகள் இன்றும் நம்மால் மறக்க முடியாது. சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று 2-ஆம் இடத்தை பிடித்தார்.
இவ்வாறாக அனைத்து விதமான செயற்பாடுகளிலும் ஜொலித்து வருகின்ற சாண்டியின் மனைவி பெயர் சில்வியா. அவர்களுக்கு லாலா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அதுமட்டுமன்றி இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் உண்டு. இவ்வாறாக அழகான குடும்பத்தை கொண்ட சாண்டி மாஸ்டர் நேற்றைய தினம் செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது நேற்று இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் போது தனது மகனை காந்தி தாத்தா போல் அலங்கரித்து அவரின் கையில் தேசியக் கொடியை கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களையும் கூறியிருக்கின்றார். இவரின் இந்தப் பதிவானது பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!