• Sep 20 2024

தமது மகளுக்காக ஆர்யா – சாயிஷா செய்துள்ள விஷயம்- அதுக்குள்ள இவ்ளோ பேமஸ்ஸா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த கொண்ட பிரபலங்கள் பலர் இருக்கின்றனர்.ஜோதிகா, பிரசன்னா – சினேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சாயிஷா ஜோடியும் உள்ளார்.இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் டெடி என்ற படத்தில் கணவன் மற்றும் மனைவியாக இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.


தங்கள் மகளுக்கு ஆரியானா என்று பெயர் வைத்துள்ளனர். அப்படி என்றால் மிகவும் புனிதமான என்று ஆதாரமாம்.ஆனால், இதுவரை தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 


அதில் கூட மகளின் முகத்தை காட்டாமல் தான் இருந்தார். இந்த நிலையில் ஆர்யா – சாயிஷா இருவரும் தங்கள் மகளுடன் Outing சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.அதே போல தனது மகள் பெயரில் ஆர்யா –சாயிஷா இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றையும் துவங்கி இருக்கின்றனர். அதில் தங்களுடைய மகளின் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு தங்களுடைய இவர்கள் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் இதுவரை 57ஆயிரத்திற்கும் மேல் அதிகமானோர் பின் தொடர்ந்து இருக்கின்றனர்.


Advertisement

Advertisement