• Sep 21 2024

நீங்க என்ன கிழிச்சீங்க...அசீமை வெளுத்து வாங்கிய ரச்சிதா...வோர்ணிங் கொடுத்த கமல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 55ம் நாளில் என்ன  நடந்தது  என்று பார்ப்போம். 

பிறீத்தியில் இருந்து கிப்ற் வவுச்சர் ஒன்று அசீமிற்கு கொடுத்தார்கள்.அதை அசீம் இந்த வீட்டில் தன்னுடன் யாரை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் எனக் கேட்டதும் அசீம் ADK யை தேர்ந்தெடுத்தார்.மணிகண்டன் மற்றும் கதிரவன் எல்லோரும் சென்னையில் இருக்கிறாங்க அடிக்கடி பார்க்க முடியும் ஆனா  ADK வேற நாட்டை சேர்ந்தவரு அவரை பார்க்க முடியாது அதனால் அவருக்கு இதை கொடுக்கின்றேன் என கொடுத்திருந்தார்.

இதன் பிறகு கமல் வந்து எல்லோரையும் நலம் விசாரித்து இருந்தார்.அதன் பிறகு மைனா நந்தினி மற்றும் அசீம் சிம்பிலி வேஷ்ற் எனும் போர்ட் பிக்பாஸ் போட்டியாளர்களால் போடப்பட்டு இருந்தது.அதை கமல் கழட்டை சொல்லி இருந்தார்.

அப்புறம் கதிரவன் மற்றும் அமுதவாணன் சண்டை பற்றி பேசியிருந்தார்.அதன் பிறகு அசீம் நான் ஒவ்வொருமுறையும் உங்களுக்கு வார்ணிங் கொடுக்கிறேன்.ஆனால் வெளியில் உள்ள ரசிகர்கள் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றுங்கள் எனக் கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறியதும் அசீம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.

அசீமிற்கு நிறைய முன்னுதாரங்கள் எடுத்து கொடுத்து அட்வைஸ் கொடுத்தார் கமல்.பழங்குடியினர் ஏலியன்ஸ் டாஸ்கில் ரச்சிதா வென்று இருந்தார்.அசீமின் குழப்பத்தால் தான் ரச்சிதா வென்றார் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு ப்ரமோக்கா யார் விளையாடுறாங்க என சொல்லுங்க பார்ப்போம்.ஆனால் அசீமை சொல்லக் கூடாது என்று கமல் கேட்டு இருந்தார்.இதற்கு கூட தனலட்சு பெற்று இருந்தார்.அசீம் விக்ரமனுக்கு கொடுத்து இருந்தார்.அதற்காக விக்ரமன் புலம்பி கொண்டு இருந்தார்.

ஷவினிடம் அதைப்பற்றி கேட்கின்றார்.ஆனால் அதைக் கேட்பதற்கு விக்ரமனுக்கு ஈடுபாடு இல்லை.அதன் பிறகு 50 நாட்களுக்கு மேலனாதால் அவர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதன் பிறகு ஹொட்சீற்றில் வைத்துக்கொண்டு கேள்வி கேட்கனும் என கமல் கேட்டு இருந்தார்.அதில் தனம் மற்றும் அசீமை நிறைய பேர் வைத்து கேட்டு இருந்தார்கள்.அப்போது ரச்சிதா அசீமை நீங்க என்ன கிழிச்சீங்க என பல மொழிநடையில் தரமாக கேட்டு இருந்தார்.அதன் பிறகு கதிரவன் மற்றும் ரச்சிதா ஆகிய  இருவரும் முதலாக சேர்வ் ஆனார்கள்.இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் குயின்சி வெளியேறுவார் என நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement