• Sep 20 2024

வீட்டுப் பெண்களை விரட்டும் குணசேகரன்... ஜீவானந்தம் குறித்து ஈஸ்வரி சொன்ன விஷயம்... கண்கலங்கி நிற்கும் ஜனனி... Ethirneechal - Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் வீட்டுப் பெண்களை பார்த்து "சும்மா தேவை இல்லாமல் இங்க பேசிட்டு நிற்காமல் போய் அந்தக் கிழவியைப் பார்த்து சொத்தை வாங்கிட்டு வர்ற வழியைப் பாருங்க" எனக் கூறி விரட்டுகின்றார். பின்னர் அவர்களும் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்கின்றனர்.


மறுபுறம் ஈஸ்வரி "ஜீவானந்தத்தோட வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரம் நடக்கும், அதுவும் என் சம்மந்தப்பட்ட ஒரு ஆளால் நடக்கும் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கல" எனக் கவலையுடன் கூறுகின்றார். இதைக் கேட்டதும் ஜனனி, நந்தினி ஆகியோரும் கலங்கி நிற்கின்றனர்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி நிற்கின்றது.

Advertisement

Advertisement