தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது சீரியல்கள் தான். திரைப்படங்களுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உண்டோ அந்த அளவிற்கு சீரியல்களுக்கும் உண்டு.
சீரியல்களை பொறுத்தவரையில் வழக்கமாக TRP ஒரு தொடருக்கு வரவில்லை என்றால் அந்த சீரியலின் இயக்குநர்கள் தான் பெரிதும் புலம்புவார்கள். ஆனால் ஒரேஒரு சீரியல் மக்களை இன்றுவரை நிலாவில் புலம்ப வைக்கிறது.
ஆம், அந்த சீரியல் வேறு எதுவுமில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' தொடர் தான். மலையாள சீரியல் ஒன்றின் ரீமேக்காகத் தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒரே ஒரு கருவை மட்டும் வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்தத் தொடரின் பிரகாரம் அடுத்த மாதத்தில் எல்லா உண்மைகளும் பாரதிக்கு தெரியவந்து முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் பரீனா என்ற வெண்பா சமீபத்தில் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது முகம் எல்லாம் நெருப்பில் உருகியது போன்று தழும்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த வீடியோவின் புகைப்படம் மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லையாம். அவர் அப்படி ஒரு மேக்கப் தான் போட்டுள்ளாராம். அதுவும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக தான் அப்படி ஒரு லுக் போட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதோ அந்த வீடியோ..!
Listen News!