• Sep 20 2024

கயலுக்கு என்ன ஆச்சு..? கண் கலங்கி அழும் எழில்... கயலை முடிக்குமாறு கௌதமிடம் சொன்ன சிவசங்கரி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலானது தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கயலுக்கு எழில் போன் பண்ண பண்ண அவரின் மொபைல் சுவிச் ஆபில் இருக்கிறது. இதனையடுத்து கயலுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை, அவளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என எழில் கண் கலங்கி அழுகின்றார்.


மறுபுறம் கௌதமிற்கு கால் பண்ணிய சிவசங்கரி "எல்லாம் நல்ல படியாய் போயிற்று இருக்கா" எனக் கேட்கின்றார். பதிலுக்கு கௌதமும் ஆமாம் என்கிறார். பின்னர் சிவசங்கரி "சீக்கிரமே கயலின் கதையை முடிச்சிடு" எனக் கௌதமிடம் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement