விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 23ம் நாளாகிய நேற்றைய தினம என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அதாவது வீட்டில் கதிரவன் மற்றும் மைனா நந்தினி இருவரும் தமது குரல்களை ஆங்காங்கே பதித்துள்ளனர். தொடர்ந்து இந்த டிவி அந்த டிவி டிவி என்னும் புதிய டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. அதில் அமுதவாணன் தலைமையில ஒரு டீமும் மைனா நந்தினி தலைமையில ஒரு டீமும் பிரிச்சு விடுறாங்க.
இந்த டாஸ்க் ஆரம்பிக்க முதல் தனலக்ஷ்மி தலைவலி என்று சும்மா போய் படுத்திருக்கும் போது ராபேட் மாஸ்டர் அவரை கலாய்க்க இருவருக்கிடையிலும் சண்டை ஏற்பட்டு விடுகின்றது. தொடர்ந்து டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது ஒரு டீம் ஏதாவது ஷோ பண்ணுவாங்க. அதை எதிர் டீம்ல இருக்கிறவங்க பார்த்து புள்ளி வழங்குவாங்களாம். இதனால் இரு டீமுக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டு விட்டது.
மேலும் அசீம் கமல் சேர் எப்பிஷோட்டிற்கு அப்பிறம் எங்கையும் அதிகமா பேசிறது இல்லை.ஒரு இடங்கள்ல ரொம்ப பொறுமையா போயிட்டு இருக்கிறார்.இருந்தாலும் மகேஷ்வரிக்கும் அசீமுக்கும் இடையில் சிறய மோதல் ஏற்பட்டது. குக்கிங் டாஸ்ல அமுதவாணன் சூப்பராக பண்ணி முடிச்சாங்க.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் பட்டிமன்றம் என்ற ஒன்று வைக்கப்பட்டது.அதில் தனலக்ஷ்மி ஷிவின் விக்ரமன் அசீம் ஆகியோர் மாறி மாறி பேசிக்கிட்டே இருந்தாங்க. இதில் ஷிவின் அசீம் பற்றிக் கூறிய சில விஷயங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது. அத்தோடு விக்ரமன் தனக்கு மரியாதை தரல என்று மகேஷ்வரி மற்றும் மைனா நந்தியிடம் தனது குரலை உயர்த்திப் பேசிட்டு இருந்தார்.இந்த டாஸ்குடன் .ந்த எப்பிஷோட் முடிவடைந்தது.
Listen News!