• Sep 20 2024

மகள் முன்னிலையில் மேடையேறி.. தாறுமாறாக அஜித்தை அவமானப்படுத்திய மீனாவின் தாயார்.. நடந்தது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் சினிமாவைப் பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் வந்திருந்தாலும் அவர் திறமையாக நடிப்பது என்பது கடினம். ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தற்போது தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். 


இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் சந்தித்த தடைகள், பட்ட அவமானங்கள் ஏராளம். அஜித் தான் பட்ட அடிகளைத் தான் படிகளாக மாற்றிக்கொண்டு முன்னேறியவர். இவ்வாறு பல தோல்விகளை கடந்து அவை யாவற்றிலும் கற்று எழுந்து வெற்றிநடை நடைபோட்டு வரும் அஜித்தை நடிகை மீனாவின் அம்மா ஒரு மேடையில் அவமானப்படுத்திய சம்பவம் குறித்து தற்போது தெரியவந்திருக்கிறது. 


அதாவது இந்தச் சம்பவமானது அஜித்தும் மீனாவும் நடித்த 'ஆனந்த பூங்காற்றே' படத்தின் சமயத்தில் நடந்திருக்கிறது. பிரபல இயக்குநர் ராஜ்கபூர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ஒரு வெற்றிப் படம் தான் ஆனந்த பூங்காற்றே. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திக் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 


இதில் அஜித்திற்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித் வளர்ந்துவரும் நடிகராக மட்டுமே இருந்தார். இன்றிருக்கும் உயரத்திற்கு  அன்று இருக்கவில்லை. ஆனால் அந்த சமயத்தில் மீனா டாப் நடிகையாக இருந்தார். 


இந்நிலையில் படம் வெளியான பிறகு பிரபல ஊடகம் ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை அஜித்திற்கும், சிறந்த நடிகைக்கான விருதை மீனாவுக்கும் கொடுத்திருக்கிறது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வ்ழங்கிய தொகுப்பாளினி, அஜித்தும், மீனாவும் இணைந்து ஒன்றாக மேடையில் நடனம் ஆட வேண்டுமென கோரிக்கை ஒன்றினை வைத்திருக்கிறார். 


அதற்கு உடனே மீனாவும் சம்மதித்து ஆட ஆரம்பிக்கும்போது, கீழே இருந்த மீனாவின் அம்மா உடனடியாக மேடையேறி, "எனது மகள் ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களோடு நடித்துவருபவர். இவர் நேற்று வந்த ஒரு நடிகர். இவருடன் நடனம் ஆடமாட்டார்" எனக் கூறி தடுத்துவிட்டாராம். இவ்வாறு அஜித்தை அவமானப் படுத்தி மீனாவின் தாயார் செய்த இந்த விடயமானது நீண்டகாலம் கழித்து தற்போது தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement