• Sep 20 2024

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாசரின் மனைவி…நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் காவல்துறை அதிகாரியாக சிறிய வேடத்தில் அசத்தலான நடிப்பின் மூலம் அறிமுகமானவர் நாசர். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை உண்மையான கதாபாத்திரமாக ஏற்று நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.

பன்முகத் திறமை கொண்டு விளங்கிய நடிகர் நாசர் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், மற்றும் பாடகராகவும் திரையுலகை கலக்கி வருகின்றார், இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டார்.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடிப்பவர் நடிகர் நாசர். திரைப்படத்திற்கு கதாநாயகனாக இருந்தாலும் சரி, கதாநாயகனுக்கு தந்தையாக இருந்தாலும் சரி, அமைச்சராக, காவல்துறை அதிகாரியாக என எந்த கதாபாத்திரத்தையும் அதேபோல் நடிப்பவர் தான் நாசர்,

இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கமலின் மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமல் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் நாசர் உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகி விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து அவருடைய மனைவி கமீலா நாசர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சர் அவர்களுக்கு உணவு மூச்சுக்காற்று எல்லாமே சினிமாதான் என்றும் அவர் சினிமாவில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.அத்தோடு இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை என்றும் தயவுசெய்து இனியாவது இந்த வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் நடிகர் நாசர் இப்போதும் பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகராக இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பதை நிறுத்தி விட்டதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement