கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற தொடர் படு பிரபலமாக ஓடியது. 2 பாகங்கள் வெற்றிகரமாக ஓடியது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது.
இந்த தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன். இவருக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது. திருமண வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் நிறைய வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தன.
இவர் காலேஜ் படிப்பை முடித்ததும் மாடலிங் மூலமாக ஒரு சில திரைப்படங்களில் சைட் ரோலில் நடித்திருக்கிறார். இவர் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்திருந்தாலும், இவருடைய திறமைக்கு ஏற்ப கதை அமையாததால் இவருடைய பார்வை சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறது.
மேலும் தொடர்ந்து சீரியல் வாய்ப்புக் கிடைக்காததால் நவீனும் கண்மணியும் இணைந்து அண்மையில் காபி ஷாப் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். தாங்கள் தொடங்கி இருக்கும் புது பிசினஸ் பற்றி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முகத்தில் இரத்தம் வடிவது போலவும் காயங்கள் ஏற்பட்டது போலவும் போட்டோ ஷீட் நடத்தியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!