பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். முன்னாள் ஆபாச நடிகையான இவர் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு அதன் பின்னர் இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்தார். அத்தோடு தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் அதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்திலும் லீடு ரோலில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
மேலும் மணிப்பூரில் உள்ள இம்பாலில் நடிகை சன்னி லியோனின் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான அரங்கு அமைக்கும் ஏற்பாடுகள் இன்று தீவிரமாகவும் முழு மூச்சுடனும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது நடைபெற்றிருக்கின்றது. அதாவது சன்னி லியோன் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று நடந்துள்ளதோடு, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் இந்நிகழ்வு ஆழ்த்தி உள்ளது.
அந்தவகையில் கையெறு குண்டு தான் அந்த இடத்தில் வீசப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் மற்றும் பாம் ஸ்குவாட் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திடீரென இப்படியொரு குண்டு வெடிப்பு நடக்க என்ன காரணம் என்று பல கோணத்தில் விசாரித்தும் வருகின்றனர்.
இருப்பினும் இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. சன்னி லியோன் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான அரங்கை பிரமாண்டமாக அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த நபர்கள் உட்பட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. சன்னி லியோன் நிகழ்ச்சியை தடை செய்யவே இந்த குண்டு வெடிப்பு நடந்ததா என்கிற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெற உள்ள ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திடீரென அந்த பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், நாளை நடைபெறுள்ள நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருவாரா என்கிற கேள்வி பலரிடையும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இக் குண்டுவெடுப்பு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளமையால் நல்ல வேலையாக சன்னி லியோன் தப்பி விட்டார், அவருக்கு எதுவும் ஆகவில்லை எனவும் சற்று சந்தோஷத்தில் உள்ளனர்.
Listen News!