• Sep 20 2024

75வயது முதியவருடன் நெருக்கமான 32வயது நடிகை... தொல்லை தாங்காமல் போலீசிடம் சரணடைந்த வயோதிபர்... நடந்தது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை நித்யா சசி. இவர் முதியவர் ஒருவரிடம் போனில் தொடர்பு கொண்டு அவருடன் நட்பினை ஏற்படுத்தி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது அந்த முதியவரின் வீட்டிற்கு நேரடியாக தனது நண்பருடன் சென்று இருக்கின்றார்.

அங்கு சென்று அந்த முதியரின் ஆடைகளை களைந்து அவருடன் நெருக்கமாக நின்று ஒரு சில புகைப்படங்களை எடுத்துள்ளார் நடிகை நித்யா சசி. அந்த சமயத்தில் நித்யா சசியின் நண்பரான பினு என்பவர் திடீரென உள்ளே நுழைந்து அந்த முதியவரை மிரட்டி இருக்கின்றார்.


அதாவது அவருடைய நிர்வாண போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமாயின் 25 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளார். அவர்கள் இருவரது மிரட்டலையும் பார்த்து முதியவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

அவர்கள் கூறியது போன்று தன்னுடைய போட்டோ வெளியானால் அவமானம் ஆகிவிடும் என கருதிய அந்த முதியவர் முதல்கட்டமாக 11 லட்சம் ரூபாய் பணத்தினை நடிகையிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மேலும் 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என நடிகையும், அவரது நண்பரும் அந்த முதியவரை மீண்டும் மிரட்டியுள்ளனர்.


இவர்களின் மிரட்டலிற்கு பயந்து, அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் வேறுவழியின்றி போலீசிடம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார் அந்த முதியவர். இதனையடுத்து ஆக்ஷன் எடுத்த போலீசார் அந்த நடிகையையும், அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர்.  

Advertisement

Advertisement