எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் பலராலும் மறக்க முடியாத ஒரு நடிகை தான் ஜெனிலியா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். குறிப்பாக இயக்குநர் சங்கர் தனது 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் வாயிலாக ஜெனிலியாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் அவர் ஈர்த்திருந்தார்.
இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்தார். அந்த சமயத்தில் ரித்திஷ் தேஷ்முக் சாதரண நடிகர் மட்டும் இல்லையாம். அவர் அப்போதைய மகாராஷ்ட்டிர முதலமைச்சரான ஶ்ரீ விலாஸ் ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.
ஆனால் இவர்களின் காதலுக்கு ரித்தீஷின் உடைய அப்பா அந்த சமயத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இதனால் படிப்படியாக வளர்ந்த அவர்களது காதல் ஒன்பது ஆண்டுக்காலம் வரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து ரித்தீஷ் தனது தந்தையை சமாதானப்படுத்தி காதலுக்கு சம்மதம் வாங்கி இருக்கின்றார். பின்னர் பிப்ரவரி 03, 2012 அன்று அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Listen News!