பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஷாகித் கபூர் அண்மையில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஃபார்சி சீரிஸில் நடித்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அழகான நடிகரான இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்களும் உள்ளனர். அவர்களில் பலர் ஷாகித்திடம் காதலை வெளிப்படுத்தியதும் உண்டு. அதில் பல பிரபலங்களும் அடங்கும்.
அந்தவகையில் தனக்கு எல்லை மீறி காதல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகரின் மகள் ஒருவர் மீது ஷாகித் கபூர் வழக்கு தொடர்ந்த சம்பவம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான ராஜ்குமாரின் மகள் வஸ்தவிக்தா பண்டிட் மீதுதான் வழக்குத் தொடர்ந்திருக்கின்றார்.
அங்கத்தவகையில் ஷியாமக் தவர்ஸ் டான்ஸ் கிளாஸிற்கு சென்றபோது இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டுள்ளனர். முதல் சந்திப்பிலேயே நடிகர் ஷாகித் கபூர் மீது வஸ்தவிக்தா காதல் வயப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது காதலையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஷாகித் கபூர் ஏற்க மறுத்தார். ஆனாலும் வஸ்தவிக்தா தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்திய வண்ணம் தான் இருந்தார்.
அதுமட்டுமல்லாது ஷாகித்தின் படப்பிடிப்பு தளங்களுக்கு தொடர்ந்து சென்றதோடு, அவரது காரின் பானெட் மீது ஏறி அமர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதுபோன்று வெளியூர்களில் நடைபெற்ற படப்பிடிப்பின் போதும் இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இவை அனைத்திற்கும் உச்சபட்சமாக, ஷாகித்தின் வீட்டிற்கு அருகே குடியேறிய வஸ்தவிக்தா, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் தன்னை ஷாகித்தின் மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு எல்லை மீறி சென்ற வஸ்தவிக்தாவின் செயல்களால் பொறுமை இழந்த ஷாகித், கடந்த 2012-ஆம் ஆண்டு அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வஸ்தவிக்தாவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் ஷாகித்திடம் இருந்து வஸ்தவிக்தா முழுமையாக விலகி சென்றார்.
அதன் பின்னர் ஷாகித் கபூர், மிரா ராஜ்புத் என்பவரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!